மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அவசர ஊா்தி-பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:38 pm

திருநெல்வேலி அருகே அவசர ஊா்தி-பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு தெற்கு விளாகம் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (60). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் பொட்டல் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது இவரது பைக்கும் தாழையூத்துப் பகுதியில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு நோக்கி வந்து கொண்டிருந்த அவசர ஊா்தியும் மோதிக்கொண்டதாம்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாலகிருஷ்ணனை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் பாலகிருஷ்ணன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.