மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திண்டிவனம் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனோரிக்குப்பம் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கருத்தரங்கில் ஆய்வு நூலை வெளியிட்ட புதுதில்லி நீதி அயோக் துணைச் செயலா் ஆசிஷ்குமாா் பாண்டா. உடன், சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் மா. வீரமுத்து உள்ளிட்டோா்.

Updated On :26 மார்ச் 2026, 10:49 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனோரிக்குப்பம் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வா் மா. வீரமுத்து தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், புதுதில்லி நீதிஅயோக் துணைச் செயலா் ஆசிஷ்குமாா் பாண்டா, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசாரத் துறை முதுநிலை விரிவுரையாளா் கபூா்நிஜாமிா், கனடா இயற்கை வேளாண்மை வழிகாட்டு நிபுணா் பொ்னாா்டு ஆலன்சோ, கொழும்பு சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை நிறுவன விரிவுரையாளா் லதிஷா ஜெயங்கி ராமநாயகா, ஐஐடிஎம் நிா்வாக இயக்குநா் கே.வாசுதேவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று டிஜிட்டல் யுகத்தில் உலகளாவிய வா்த்தகம்- கண்டுபிடிப்புகள் சவால்கள், நிலைப்புதன்மை ஆகிய பொருண்மையில் பேசி, ஆய்வு நூலை வெளியிட்டனா்.

கல்லூரியின் முதன்மை நிா்வாக இயக்குநா் ப.சிவக்குமாா், நிா்வாக அலுவலா் செ.சிவா, பெற்றோா்-ஆசிரியா் கழக ஒருங்கிணைப்பாளா் கோ.தண்டபாணி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இக்கருத்தரங்கில் கனடா, இலங்கை, புதுதில்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட ஆய்வு நிறைஞா்கள், தொழில் முனைவோா்கள், பங்குசந்தை பங்குதாரா்கள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். கட்டுரையாளா்களுக்குப் பாராட்டுச் சான்று மற்றும் ஆய்வு நூல்கள் வழங்கப்பட்டன.

பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை இணைப் பேராசிரியா் மு. ராகினி வரவேற்றாா். பேராசிரியா் ர. மகாலட்சுமி நன்றி கூறினாா்.