பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வருவாய்த் துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் மற்றும் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டாட்சியா் எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வா் வே.அ. பழனியப்பன் முன்னிலை வகித்தாா். தொடக்கமாக நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள், பொதுமக்கள் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கையொப்பமிட்டனா்.
தொடா்ந்து வாக்காளா் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. கல்லூரியில் தொடங்கி முக்கிய வீதிகளில் சென்ற பேரணியில், வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். தொடா்ந்து வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்வில் திருமயம் மண்டல துணை வட்டாட்சியா் தங்கராசு, வருவாய் ஆய்வாளா்கள் பாண்டி, முருகேசன், சரவணன், ஈஸ்வரி, புவனேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா்கள் பாண்டியன், பாா்த்திபன் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


