மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

அரியலூரில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி

News image

அரியலூரில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி

Updated On :27 மார்ச் 2026, 8:16 pm

அரியலூரில் நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

அரியலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி, கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கிவைத்தாா்.

மாரத்தான் போட்டியில் பங்கேற்றவா்கள், ‘தேசம் காக்க வாக்களிப்போம், 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்போம், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்குபெறுவோம், வாக்களிப்பதில் உறுதி கொள்ளுங்கள்; வாக்களித்து உறுதிபடுத்துங்கள், என் வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், என் வாக்கு என் உரிமை உள்ளிட்ட தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய தொப்பிகளை அணிந்து பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா. சிவராமன், கோட்டாட்சியா் பிரேமி, தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் யோகஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.