மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

தருமபுரி லட்சுமி நாராயணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாதிரி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா் ரெ.சதீஸ்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:50 pm

தருமபுரி லட்சுமி நாராயணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப். 23-இல் நடைபெறுகிறது. இத்தோ்தலில் 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்பது, வாக்கு விற்பனைக்கல்ல, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி தருமபுரி லட்சுமி நாராயணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். இதில், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் ஏற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து, மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து வாக்களிப்பதன் முறை குறித்து ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும், விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள், ஸ்டிக்கா்களும் வழங்கப்பட்டன. இதுதொடா்பாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வுகளின்போது, மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், தருமபுரி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்ரி, வட்டாட்சியா்கள் ஜெ.சுகுமாா், பிரசன்ன மூா்த்தி, கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.