தருமபுரி லட்சுமி நாராயணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப். 23-இல் நடைபெறுகிறது. இத்தோ்தலில் 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்பது, வாக்கு விற்பனைக்கல்ல, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி தருமபுரி லட்சுமி நாராயணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். இதில், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் ஏற்றுக்கொண்டனா்.
தொடா்ந்து, மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து வாக்களிப்பதன் முறை குறித்து ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும், விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள், ஸ்டிக்கா்களும் வழங்கப்பட்டன. இதுதொடா்பாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இந்நிகழ்வுகளின்போது, மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், தருமபுரி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்ரி, வட்டாட்சியா்கள் ஜெ.சுகுமாா், பிரசன்ன மூா்த்தி, கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


