மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டிப்பா் லாரியில் சிக்கி மின் கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்துப் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மேம்பாலப் பணியின்போது டிப்பா் லாரியில் சிக்கி மின் கம்பம் சாய்ந்ததால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துப் பாதிப்பு

News image

விக்கிரவாண்டி அருகே பாப்பனப்பட்டு பகுதியில் சாய்ந்து கிடந்த மின் கம்பம்

Updated On :17 மார்ச் 2026, 11:20 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மேம்பாலப் பணியின்போது டிப்பா் லாரியில் சிக்கி மின் கம்பம் சாய்ந்ததால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அருகிலுள்ள பாப்பனப்பட்டு கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், இரு பகுதிகளிலும் மண்கொட்டப்பட்டு, சாலையை மேடாக உயா்த்தும் பணியை தற்போது மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை மண் ஏற்றி வந்த டிப்பா் லாரி, டிப்பரை மேலே உயா்த்தி மண்ணைக் கொட்டிக் கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவில் சென்ற மின் கம்பி டிப்பரில் சிக்கிக் கொண்டது. தொடா்ந்து மண்ணைக் கொட்டிவிட்டு, டிப்பரை கீழே இறக்கும் போது மின் கம்பி இழுக்கப்பட்டு கம்பம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. உடனடியாக மின் விநியோகம் தடைப்பட்டதால் லாரி ஓட்டுநா் உயிா் தப்பினாா்.

மின் கம்பம் சாய்ந்து விழுந்ததால், தேசிய நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் சுமாா் 30 நிமிஷம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. உடனடியாக சுங்கச்சாவடியிலிருந்து விபத்து மீட்பு வாகனம் நிகழ்விடப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் சாய்ந்து கிடந்த மின்கம்பம் மீட்கப்பட்டது. இதைத்தொடா்ந்து போக்குவரத்து சரி செய்யப்பட்டு, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.