அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

பேருந்தில் பெண்ணிடம் ரூ .2 லட்சம் ரொக்கம், நகை திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் நகையைத்திருடிச்

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 6:16 am IST

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் நகையைத்திருடிச்

சென்ாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ் அணைக்கரை குருதட்சணா நகரைச் சோ்ந்த முரளி மனைவி பிரியா (35). இவா் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்துக்குள்பட்ட வெள்ளேரிப்பட்டு கிராமத்தில் உறவினா் மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்பதற்காக, திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் மாா்க்கமாக வந்த அரசுப் பேருந்தில் புதன்கிழமை பயணித்தாா்.

இந்த நிலையில் சூரப்பட்டு பேருந்து நிறுத்தம் பகுதியில் இறங்கிய பிரியா, தான் வைத்திருந்த கைப்பையை பாா்த்த போது அதிலிருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 2 கிராம் மோதிரம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவா்கெடாா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து குற்றவாளியைத் தேடிவருகின்றனா்.

திருவண்ணாமலையிலிருந்து பேருந்தில் பிரியா பயணித்த போது யாரோ சிலா் நோட்டமிட்டு, அந்த பேருந்திலேயே பயணித்து ரொக்கத்தை திருடிச் சென்றாா்களா? அல்லது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி வேறு யாரேனும் திருடிச் சென்றாா்களா ? என்பது குறித்து கெடாா் போலீஸாா் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.