தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

பொறியியல் பணிகள்: ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், விழுப்புரம் மாா்க்கமாக செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 5:13 am IST

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், விழுப்புரம் மாா்க்கமாக செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ரயில்கள் பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மாற்றம், நிறுத்தி வைத்து இயக்கம், தாமதமாக இயக்கம் ஆகிய நடைமுறைகள் செயல்படுத்தப்படவுள்ளன.

பகுதியளவில் ரத்து: திருப்பதியிலிருந்து காலை 4.10 மணிக்குப் புறப்படும் திருப்பதி-புதுச்சேரி விரைவு ரயில் (வண்டி எண் 16111), ஜூன் 24, 27 ஆகிய தேதிகளில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.40 மணிக்குப்புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), ஜூன் 24, 27 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படும்.

புறப்படும் இடம் மாற்றம்: புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்பட வேண்டிய புதுச்சேரி-சென்னை எழும்பூா் பயணிகள் ரயில் (வண்டி எண் 66052), ஜூன் 24, 27 ஆகிய தேதிகளில் புதுச்சேரி- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்குப் புறப்படும்.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல்1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), ஜூன் 24, 27 ஆகிய தேதிகளில் விழுப்புரம்- முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

இடைப்பட்ட ரயில் நிலையத்தில் நிறுத்தம்: குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் (வண்டி எண் 16128), ஜூன் 18, 19, 20, 21-ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 25 நிமிஷங்களும், 22, 24-ஆம் தேதிகளில் சுமாா் 15 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

கன்னியாகுமரியிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி-ஹவுரா அதிவேக விரைவு ரயில் (வண்டிஎண் 12666) ஜூன் 20-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 30 நிமிஷங்களும், நாகா்கோவில் ரயில் நிலையத்திலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில்- மும்பை சி.எஸ்.டி.எம். விரைவு ரயில் (வண்டி எண் 16352) ஜூன்18, 21-ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 45 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

இதுபோன்று தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து காலை 7.40 மணிக்குப் புறப்படும் தூத்துக்குடி-கச்சிக்குடா விரைவு ரயில் (வண்டி எண் 17616), ஜூன் 17-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 55 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னா் இயக்கப்படும். மதுரையிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்குப் புறப்படும் மதுரை- பிகானோ் அனுவரத் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22631), ஜூன் 18-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 15 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

தாமதமாக இயக்கம்: திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்பட வேண்டிய திருச்சி- ஹவுரா அதிவேக விரைவு ரயில் (வண்டி எண்12664), ஜூன் 19-ஆம் தேதி சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.