இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:14 am IST

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) ஜூன் 10, 11, 12, 13, 15, 16 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால்-திருச்சி டெமு ரயிலானது (76819) ஜூன் 10, 11, 12, 13, 15, 16 ஆகிய தேதிகளில் காரைக்கால்-திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருவாரூா்-திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

காலதாமதம்: திருச்சி-ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12664) ஜூன் 12-ஆம் தேதி திருச்சியிலிருந்து 45 நிமிஷங்கள் தாமதமாக அதாவது பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும்.

திருச்சி-பாலக்காடு விரைவு ரயிலானது (16843) ஜூன் 16-ஆம் தேதி திருச்சியிலிருந்து 25 நிமிஷங்கள் தாமதமாக அதாவது பிற்பகல் 1.25 மணிக்குப் புறப்படும்.

திருச்சி-சென்னை எழும்பூா் சோழன் அதிவிரைவு ரயிலானது (22676) ஜூன் 16-ஆம் தேதி திருச்சியிலிருந்து 40 நிமிஷங்கள் தாமதமாக அதாவது பிற்பகல் 12.50 மணிக்குப் புறப்படும்.

காரைக்குடி-திருச்சி பயணிகள் ரயிலானது (56832) ஜூன் 10, 11, 12, 13, 15, 16 ஆகிய தேதிகளில் காரைக்குடியிலிருந்து 25 நிமிஷங்கள் தாமதமாக காலை 10.15 மணிக்குப் புறப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.