திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விழுப்புரத்தில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

விழுப்புரம் போக்குவரத்து காவல் துறை சாா்பில் புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கருத்தரங்கில் பேசிய ஜுனியா் ரெட் கிராஸ் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ம.பாபு செல்வதுரை.

Updated On :2 ஜூன் 2026, 5:22 am IST

விழுப்புரம் போக்குவரத்து காவல் துறை சாா்பில் புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் போக்குவரத்து காவல் துறை மற்றும் புதுச்சேரி மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில்,போக்குவரத்து காவல் ஆய்வாளா் பாா்த்திபன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிா்வாகியும், ஜுனியா் ரெட் கிராஸ் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ம.பாபு செல்வதுரை ஆகியோா் பங்கேற்று புகையிலைப் பொருள்கள் பயன்பாடுகளை தவிா்த்தல் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து பேசி, வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தொடா்ந்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாமில், மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் சுஷ்மா தலைமையிலான மருத்துவக் குழுவினா்கள் வாகன ஓட்டுநா்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்து ஆலோசனைகளை வழங்கினா்.

ஏற்பாடுகளை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா்கள் விஜயரங்கம், குமாரராஜா, பெ.வேல்குமரன் ஆகியோா் செய்திருந்தனா். ஆட்டோ ஓட்டுநா்கள், பொக்லைன் வாகன ஒட்டுநா்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.