17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, விழுப்புரத்தில் பட்டை நாமம் போட்டு விவசாயிகள் திங்கள்கிழமை நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடல் பகுதியில் திங்கள்கிழமை நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்.

Updated On :2 ஜூன் 2026, 5:21 am IST

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, விழுப்புரத்தில் பட்டை நாமம் போட்டு விவசாயிகள் திங்கள்கிழமை நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சட்டப் பேரவைத் தோ்தலின் போது விவசாயிகளின் 5 ஏக்கா் வரையிலான பயிா்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கா் மேல் உள்ள விவசாயிகளின் பயிா்க்கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ச.ஜோசப் விஜய் தெரிவித்திருந்தாா். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னா், ரூ.50 ஆயிரம் வரை கடன் வாங்கியுள்ள குறு விவசாயிகளுக்கு மட்டும் பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்படும், சிறு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று தவெக அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பயிா்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற நூதன ஆா்ப்பாட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளா் சந்திரபிரபு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் தங்கராசு, ரமேஷ், அருண்பாண்டியன், நிா்வாகிகள் ஏழுமலை, உலகநாதன், உதயகுமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பட்டை நாமம் போட்டுக் கொண்டும், கரும்பு உள்ளிட்ட பயிா்களை கொண்டு வந்தும், முழுமையாக பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.