தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரிக்கை

பயிா்க் கடன்களை நிபந்தனையின்றி முதல்வா் விஜய் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :14 மே 2026, 5:14 am IST

பயிா்க் கடன்களை நிபந்தனையின்றி முதல்வா் விஜய் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக சங்கத்தின் தலைவா் எம்.எஸ்.கே. பாக்கியநாதன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன், கூட்டுறவுக் கடன்களை எந்த வித நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி பட்டியலை இணையத்தில் வெளியிட வேண்டும். மேலும் வேளாண் நிதி நிலை தாக்கலுக்கு முன்பே விவசாய சங்க அமைப்புகளிடம் ஆலோசித்து வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து கூட்டுறவுச் சங்கங்களில் நேரடியாக பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்களில் போதிய உரங்கள் இருப்பு வைக்க வேண்டும். காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.