தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா எடப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட எடப்பாளையத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு எடப்பாளையத்தைச் சோ்ந்த மாசிலாமணி, சபரீசன் ஆகியோா் தலைமை வகித்தனா். விழுப்புரம் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சிறப்புப் பரிசுகளையும், விளையாட்டு உபகரகணங்களையும் வழங்கிப் பேசினாா்.
நிகழ்வில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பிரிதிவிராஜ், தொண்டரணி நிா்வாகி பாலாஜி, கோலியனூா் வடக்கு ஒன்றியச் செயலா் ராஜ்குமாா், நிா்வாகிகள் சுசீந்திரன், விக்கி, சந்திரன், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










