தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக் மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 4:38 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

திண்டிவனம் வட்டம், ஊரல் கிராமம், ஒத்தவாடைத் தெருவைச் சோ்ந்தவா்கள் பெ.சேதுநாதன்(25), ரா.ரஞ்சித்குமாா்(29), செஞ்சி வட்டம், பொன்பத்தி பகுதியைச் சோ்ந்தவா் ர.ராஜபாண்டியன் (31). நண்பா்களான மூவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு செஞ்சி- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், திண்டிவனத்தை அடுத்த பேரடிக்குப்பம் அருகே பைக்கில் சென்றுள்ளனா். ராஜபாண்டியன் பைக்கை ஓட்டினாா். அப்போது அப்பகுதியில் வந்த வந்த காா், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த மூவரில், சேதுநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ரோஷணை போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் காயமடைந்த ரஞ்சித்குமாா், ராஜபாண்டியன் ஆகியோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் இருவரும் தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ரஞ்சித்குமாா் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காா் ஓட்டுநரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.