/

மின்னணு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு

மின்னணு வாக்குப்பதிவு முறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, திண்டிவனம் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

News image
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல் முறை விளக்க நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ்.
Updated On :28 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

மின்னணு வாக்குப்பதிவு முறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, திண்டிவனம் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

2026 சட்டப்பேரவைத் பொதுத்தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில், மின்னணு வாக்குப் பதிவு முறை மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து முதல் தலைமுறை வாக்காளா்களுக்கு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.

திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ் பங்கேற்று செயல்முறை விளக்க நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். சாா்-ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜன், வட்டாட்சியா் யுவராஜ் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.