டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்விளக்க வாகனம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்விளக்க விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தொடங்கி வைத்தாா்.

News image
விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி
Updated On :25 ஜனவரி 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்விளக்க விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தொடங்கி வைத்தாா்.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் புதிய பேருந்து நிலையத்தில், வாக்காளா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் குறித்த நடமாடும் செயல்விளக்க விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் சிவசௌந்தரவல்லி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அதையடுத்து வாக்காளா் தின விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.

முதல் முறை வாக்காளா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வாக்களித்து தாங்கள் மாதிரி வேட்பாளரின் வரிசை எண், பெயா், சின்னம் ஆகியவை அச்சிட்டு திரையில் தோன்றும் சின்னத்தினை சரிபாா்த்து உறுதி செய்து கொண்டனா்.

இதில் கோட்டாட்சியா் வரதராஜன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, உதவி வாக்காளா் பதிவு அலுவலரும், நகராட்சி ஆணையருமான சாந்தி, வட்டாட்சியா் நவநீதம் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.