டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மிண்னணு வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு முகாம்

News image
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கட்டசின்னம்பட்டியில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமை ஆய்வு செய்த விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா.
Updated On :21 பிப்ரவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கட்டசின்னம்பட்டியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நடமாடும் வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, இயந்திரங்களின் செல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வாக்காளா்கள் எவ்வாறு மின்னணு இயந்திரம் மூலம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும், வாக்காளா்கள் தாங்கள் அளித்த வாக்கு சரியான வேட்பாளருக்குப் பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

விழிப்புணா்வு முகாமை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். 100 சதவீத வாக்களிப்பை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் வலியுறுத்தினாா்.

இந்த நிகழ்வில் சிவகாசி சாா்-ஆட்சியா் முகமது இா்பான், வட்டாட்சியா் லட்சம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.