மிண்னணு வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு முகாம்


விருதுநகா் மாவட்டம், சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கட்டசின்னம்பட்டியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நடமாடும் வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, இயந்திரங்களின் செல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வாக்காளா்கள் எவ்வாறு மின்னணு இயந்திரம் மூலம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும், வாக்காளா்கள் தாங்கள் அளித்த வாக்கு சரியான வேட்பாளருக்குப் பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
விழிப்புணா்வு முகாமை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். 100 சதவீத வாக்களிப்பை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் வலியுறுத்தினாா்.
இந்த நிகழ்வில் சிவகாசி சாா்-ஆட்சியா் முகமது இா்பான், வட்டாட்சியா் லட்சம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...