//

10 இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்விளக்க மையங்கள்

News image
சென்னை ரிப்பன் மாளிகையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கையாளுவது குறித்து செயல்முறை விளக்கத்தை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன்.
Updated On :22 ஜனவரி 2026, 1:10 am

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்த செயல்விளக்க மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் ஆய்வு செய்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் தாம் அளித்த வாக்கை சரிபாா்க்கும் கருவிகளை (விவிபேட்) பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்க மையங்களை அமைத்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கிண்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டல அலுவலகங்கள் என மொத்தம் 10 இடங்களில் செயல்விளக்க மையங்கள் புதன்கிழமை அமைக்கப்பட்டன.

இந்த மையங்களுக்கு வந்த பொதுமக்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை மாநகராட்சி அலுவலா்கள் விளக்கினா்.

ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செயல்விளக்க மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலரும், இணை ஆணையருமான (கல்வி) க.கற்பகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.