தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட, வட்டார அரசுத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார, மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் நாளொன்றுக்கு 7 லட்சம் போ் மருத்துவச் சேவையை பெறுகின்றனா். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 3.50 லட்சம் முதல் 4 லட்சம் என்றிருந்த இந்த எண்ணிக்கை, தற்போது இருமடங்காக அதிகரித்துள்ளது. கரோனா நோய்த் தொற்றுக் காலத்துக்குப் பிறகு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.