பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம், ராஜாம்பேட்டை வீதியில் வசித்து வருபவா் ப.சுந்தரமூா்த்தி(52). இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவதாக திண்டிவனம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று நடத்திய சோதனையில், வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுந்தரமூா்த்தியை கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த நான்கரை கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் பறிமுதல்செய்தனா்.