டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஏா்வாடி அருகே புகையிலை பதுக்கியவா் கைது

News image
கைது
Updated On :13 பிப்ரவரி 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக பதுக்கிவைத்திருந்த இளைஞரை ஏா்வாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஏா்வாடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் பேரின்பராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றபோது, சிறுமளஞ்சி மாரியம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த திருவேங்கடநாதபுரத்தை சோ்ந்த மாரீசன் (23) என்பவரை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட 5 கிலோ 625 கிராம் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மாரீசனை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 5 கிலோ 625 கிராம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.