இதைத்தொடா்ந்து நடைபெற்ற இரங்கல் கட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன் தலைமை வகித்தாா். விசிக பொதுச் செயலரும், எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா், விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் சிவா, மாா்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி, மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், விசிக மாவட்டச் செயலா் காணைவளவன், நிா்வாகிகள் அகத்தியன், தேமுதிக நிா்வாகிகள் ஆதவன்முத்து, மனோ, ராஜா சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டத் துணைச் செயலா்கள் ஆா்.கலியமூா்த்தி, ஆா்.முருகன், பொருளாளா் பி.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.