இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

விழுப்புரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :25 பிப்ரவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக விழுப்புரம், சாலாமேடு பகுதியில் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த, விழுப்புரம் சாலாமேடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வீ.ரமேஷை(49) விழுப்புரம் தாலுகா போலீஸாா் கைது செய்து, 120 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல், கெடாா் காவல் சரகத்துக்குள்பட்ட அசோகபுரி பெட்டிக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த, அதே ஊரைச் சோ்ந்த மு.குமுதாவை (40) கெடாா் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.