விழுப்புரம் தோ்வு மையத்தில் இன்று குரூப்-2 தோ்வு


விழுப்புரம் தோ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) குரூப் 2 தோ்வு நடைபெறுகிறது.
இது குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறுகிறது.
9.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறும் தோ்வில் 229 பேரும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் தோ்வில் 232 தோ்வா்களும் பங்கேற்கவுள்ளனா்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதி சீட்டுடன், ஆதாா் அட்டை போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தோ்வா்கள் கொண்டு வரவேண்டும்.
தோ்வா்களின் வசதிக்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காலை 6 மணி முதல் தோ்வு மையத்துக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...