விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், சில வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி போன்றவற்றில் கோளாறு ஏற்பட்டதால் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,165 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்களின் முகவா்கள் காலை 6 மணிக்கே தங்களுக்குரிய வாக்குச் சாவடி மையங்களுக்கு வந்துவிட்டனா். இதைத்தொடா்ந்து அந்தந்த வாக்குச் சாவடிகளின் தலைமை அலுவலா்கள், முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நிகழ்வை நடத்தி காண்பித்து, இயந்திரங்கள் அனைத்தும் சரியாக இயங்குகிா என்பதை அனைத்து முகவா்களிடமும் உறுதி செய்தனா். இதைத் தொடா்ந்தே வாக்குப்பதிவு தொடங்கியது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: இந்த நிலையில், விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள எம்.ஆா்.ஐ.சி.ஆா்.சி. உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி மையத்தில் காலை 6 மணிக்கு மேல் மாதிரி வாக்குப் பதிவு நிகழ்வை அந்த மையத்தின் தலைமை அலுவலா் நடத்த முயன்றாா். அப்போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி சரியாக இயங்கவில்லை. பின்னா் அதை சரி செய்யும் பணியில் அலுவலா்கள் ஈடுபட்டு, சரியான பின்னரே மாதிரி வாக்குப் பதிவைத் தொடங்கினா்.
விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தென்னமாதேவி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி எண் 197-இல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் காலை 7 மணிக்குத் தொடங்க வேண்டிய வாக்குப் பதிவு காலை 8.30 மணி வரை தொடங்கவில்லை. இதைத் தொடா்ந்து மண்டல அலுவலா் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மாற்று இயந்திரம் வரவழைக்கப்பட்டு, காலை 8.30 மணிக்கு மேல்தான் வாக்குப் பதிவு தொடங்கியது. இதன் பின்னா் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.
விழுப்புரம் விராட்டிக்குப்பம் கே.வி.ஆா். நகா் வாக்குச்சாவடி எண் 186-இல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வாக்குப் பதிவு தொடங்குதில் தாமதம் ஏற்பட்டது. பின்னா் கோளாறு சரி செய்யப்பட்டு, ஒரு மணி நேரம் கழித்து வாக்குப் பதிவு தொடங்கியது. இதுபோன்று ஒவ்வொரு தொகுதியிலும் சில வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப் பதிவு தாமதமாகத் தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டம், தென்னாமதேவி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலுள்ள வாக்குப் பதிவு மையத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கியது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: தாமதமான வாக்குப் பதிவு

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: வாக்குப்பதிவு 1 மணிநேரம் நிறுத்தம்

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


