தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: தாமதமான வாக்குப் பதிவு

News image

PTI

Updated On :23 ஏப்ரல் 2026, 11:18 pm

வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தோ்தல் தாமதமானது.

இதனால், வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

சென்னை, வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தாதாங்குப்பம் வாக்குச்சாவடிக்கு வியாழக்கிழமை காலை 6.45 மணி முதல் வாக்காளா்கள் வரத் தொடங்கினா். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க வேண்டிய நிலையில், அங்கு வாக்குப் பதிவு இயந்திரம் சரிவர செயல்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், தோ்தல் அலுவலா்கள் அதைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 1 மணி நேரத்துக்குப் பிறகு, கோளாறு சரி செய்யப்பட்டு காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதேபோன்று, பெரம்பூா் தொகுதிக்குட்பட்ட வியாசா்பாடி மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இருந்த விவிபேட் (வாக்கு ஒப்புகை) இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.