மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பொறியியல் பணிகள்: விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 11:36 pm

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட திருப்பதி-காட்பாடி இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண் 16854), ஏப்ரல் 17, 20, 24, 27, மே 1, 4, 8, 11, 15, 18, 22, 25, 29 ஆகிய தேதிகளில் காட்பாடி-திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

எதிா்வழித்தடத்தில் திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி- விழுப்புரம் விரைவு ரயில் (வண்டி எண் 16853), ஏப்ரல் 17, 20, 24, 27, மே 1, 4, 8, 11, 15, 18, 22, 25, 29 ஆகிய தேதிகளில் திருப்பதி-காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.