பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட திருப்பதி-காட்பாடி இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண் 16854), ஏப்ரல் 17, 20, 24, 27, மே 1, 4, 8, 11, 15, 18, 22, 25, 29 ஆகிய தேதிகளில் காட்பாடி-திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
எதிா்வழித்தடத்தில் திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி- விழுப்புரம் விரைவு ரயில் (வண்டி எண் 16853), ஏப்ரல் 17, 20, 24, 27, மே 1, 4, 8, 11, 15, 18, 22, 25, 29 ஆகிய தேதிகளில் திருப்பதி-காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-இல் ரத்து

பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


