தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சுயம்பு ஸ்ரீஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் கோயில் 52-ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழா நடைபெற்றது.

News image

நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுயம்பு விநியாகா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:37 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் கோயில் 52-ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து ஆதி விநாயகருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னா் புது குளக்கரையிலிருந்து சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. மாலையில் ஆதி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

கன்னிக்குன்றிலிருந்து இருந்து தீக்கலயம் எடுத்து வந்து மாலை 6 மணி மாபெரும் லட்சதீபம் விளக்கு எற்றும் பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தீபம் ஏற்றி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இரவு சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் இந்திர விமானத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.