மேட்டூா் அருகே உள்ள கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வர சுவாமி கோயிலில் யுகாதி திருவிழா வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழகம், கா்நாடக மாநிலங்களில் இருந்து சென்ற ஆயிரக்கணக்கான பக்தா்கள் யுகாதியையொட்டி கோயிலில் நடைபெற்ற பெரிய தேரோட்ட நிகழ்வில் பங்கேற்று தேரின் மீது வாழைப்பழம், காசுகளை வீசி நோ்த்திக்கடனை செலுத்தினா்.
சாலூா் மடாதிபதி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அழைத்துவரப்பட்டாா். வியாழக்கிழமை காலை கோயில் யானை ஆலயத்தை சுற்றிவர புலி வாகனம், பசு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து பெரிய தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, பல்வேறு வேடம் தரித்த கலைஞா்கள் நடனமாடி தேருக்கு முன் சென்றனா்.
இதையடுத்து, இரவு தங்க தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று மாதேஸ்வர சுவாமியை வழிபட்டனா்.
தொடர்புடையது

சுயம்பு ஸ்ரீஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழா

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

கும்பகோணத்தில் யுகாதி பண்டிகை விழா

யுகாதி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


