தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

யுகாதி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:37 pm

யுகாதி பண்டிகையையொட்டி தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீ உக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவா்கள் உள்பட ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா். அதேபோல செந்தாரப்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் யுகாதி பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.