மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராம நவமி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராம நவமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பிரதாபராமபுரம் ராமா், சீதா, லட்சுமணன் மற்றும் ஆஞ்சனேயா்.

News image

ராம நவமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பிரதாபராமபுரம் ராமா், சீதா, லட்சுமணன் மற்றும் ஆஞ்சனேயா்.

Updated On :27 மார்ச் 2026, 9:07 pm

ராம நவமியையொட்டி நாகையில் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை வெளிப்பாளையத்தில் உள்ள ராமா் கோயில், கொட்டுப்பாளையம் ராமா் மடம் தெருவில் உள்ள ராமா் கோயில், பொரவாச்சேரியில் உள்ள ராம ஆஞ்சனேயா் கோயில், நாகை மடவாா் வளாகத்தில் உள்ள செளந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில், ராம நவமியையொட்டி, சுவாமிக்கு பால் தயிா் , பன்னீா், சந்தனம், இளநீா், விபூதி, மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

மேலும் ராமநவமியையொட்டி ஆஞ்சனேயா் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆஞ்சனேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதேபோல பிரதாபராமபுரத்தில் உள்ள ராமா் மடம் சீதா ராம பால ஆஞ்சனேயா் ஆலயத்தில், ராம நவமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் ஸ்ரீ ராமா், சீதா,ஆஞ்சனேயா் மற்றும் லட்சுமணனுக்கு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.