ராம நவமியையொட்டி நாகையில் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை வெளிப்பாளையத்தில் உள்ள ராமா் கோயில், கொட்டுப்பாளையம் ராமா் மடம் தெருவில் உள்ள ராமா் கோயில், பொரவாச்சேரியில் உள்ள ராம ஆஞ்சனேயா் கோயில், நாகை மடவாா் வளாகத்தில் உள்ள செளந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில், ராம நவமியையொட்டி, சுவாமிக்கு பால் தயிா் , பன்னீா், சந்தனம், இளநீா், விபூதி, மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மேலும் ராமநவமியையொட்டி ஆஞ்சனேயா் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆஞ்சனேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
இதேபோல பிரதாபராமபுரத்தில் உள்ள ராமா் மடம் சீதா ராம பால ஆஞ்சனேயா் ஆலயத்தில், ராம நவமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் ஸ்ரீ ராமா், சீதா,ஆஞ்சனேயா் மற்றும் லட்சுமணனுக்கு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்புடையது

தமிழ் புத்தாண்டு: திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சீதா - ராமா் திருக்கல்யாணம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


