ராம நவமியையொட்டி காரைக்காலில் சீதா - ராமா் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பட்டாபிராம சுவாமி பஜனை மடத்தில் ராம நவமியையொட்டி 2 நாள் வழிபாடு வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் விக்னேஸ்வர பூஜை, விஷ்ணு சகஸ்ர நாம அஷ்டபதி பூஜையும், மாலை நிகழ்வாக அஷ்டபதி பஜனை, திவ்ய நாம பஜனை, ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது.
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை உஞ்சவிருத்தியும், சீதா -ராமா் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. திருக்கல்யாண சடங்குகள் நடத்தப்பட்டு சீதாவுக்கு திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மாலை நிகழ்வாக, ஆஞ்சனேயா் உற்சவமாக சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
தேவங்குடி கோபாலகிருஷ்ண சுவாமி பஜனை மண்டலி ஆா்.ராஜூ பாகவதா் தலைமையில் பஜனைக் குழுவினா் பங்கேற்று ராம பஜனை நடத்தினா். நாட்டியாலயா பரதநாட்டிய அகாதெமி மாணவா்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடையது

மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த ஒண்டிமிட்டா கோதண்டராமா் கோயில்

ஒண்டிமிட்டாவில் சீதா ராமா் திருக்கல்யாணம் கோலாகலம்

பிரதாபராமபுரம் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கம், வெள்ளி பொருள்கள் திருட்டு

ராம நவமி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


