மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பராபவ தமிழ் ஆண்டு பிறப்பையொட்டி திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வழிவிடும் முருகன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:01 pm

பராபவ தமிழ் ஆண்டு பிறப்பையொட்டி திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மாநகரிலுள்ள ஐயப்பன் கோயில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில், உச்சிப்பிள்ளையாா் கோயில், திருவானைக்கா அகிலாண்டேசுவரி திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், கல்லுக்குழி ஆஞ்சனேயா் கோயில், உறையூா் வெக்காளியம்மன் திருக்கோயில், பஞ்சவா்ணேசுவர சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்,திருப்பட்டூா் பிரம்மபுரீசுவரா் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கூட்டம் அதிகமாக காணப்பட்ட கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடங்கள், பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை என்பதால், திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பியிருந்தது.