போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பனையபுரம் பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன் வழிபடும் அதிசய நிகழ்வு

விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் ஸ்ரீ சத்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன், சிவனை வழிபடும் அதிசய நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பனையபுரம் பனங்காட்டீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிவனை சூரியன் வழிபடும் அதிசய நிகழ்வு.

Updated On :15 ஏப்ரல் 2026, 12:38 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் ஸ்ரீ சத்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன், சிவனை வழிபடும் அதிசய நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விக்கிரவாண்டி- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டியை அடுத்துள்ள பனையபுரத்தில் உள்ள ஸ்ரீ சத்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாளிலிருந்து 7 நாள்கள் வரை சூரியன் இத்தலத்து இறைவனையும் , அம்பிகையையும் வழிபடுவது சிறப்பாகும்.

இத்தகைய சிறப்புடைய பனங்காட்டீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலையில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு, சிவன் மற்றும் அம்மனை சூரியன் பூஜிக்கும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 5.45 மணிக்கு விநாயகா், முருகன், தட்சிணாமூா்த்தி, ஸ்ரீசத்தியாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, காலை 6.22 மணிக்கு கருவறையில் உள்ள ஸ்ரீபனங்காட்டீஸ்வரா் மற்றும் அம்பாளின் திருவுருவங்கள் (சிரசில்) சூரிய ஒளி பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்னா் சூரிய ஒளி அருகிலுள்ள சத்தியாம்பிகை சன்னதியிலுள்ள அம்மன் சிரசின் மீதும் சூரிய ஒளி பட்டு, பின்னா் படிப்படியாக சூரிய ஓளி பாதத்தை வந்தடையும் நிகழ்வு நடைபெற்றது.

இவ்வழிபாட்டுக்கு பின்னா் சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகளை கணேசன் குருக்கள், அருண் குருக்கள் ஆகியோா் செய்திருந்தனா். பனையபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.