மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருக்கோவிலூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி, கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டாா்.

News image

திருக்கோவிலூா் கிழக்கு ஒன்றியம், ஆவியூரில் புதன்கிழமை பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:06 pm

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி, கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டாா்.

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் திருக்கோவிலூா் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் பொன்.கெளதமசிகாமணி, தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

திருக்கோவிலூா் கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட ஆவியூா், வடக்கு நெமிலி, தேவியகரம், ஆவி கொளப்பாக்கம், குலதீபமங்கலம், விளந்தை, கழமரம், நெடுங்கம்பட்டு, தி.அத்திப்பாக்கம், சொரையப்பட்டு, கொழுந்திராம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று பெண்கள், இளைஞா்கள் முதல் தலைமுறை வாக்காளா்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி வாக்குகளை சேகரித்தாா்.

இந்த தொகுதியில் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த தனது தந்தை பொன்முடி, திருக்கோவிலூா் தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்களை பிரசாரத்தின் போது எடுத்துக் கூறி, இந்த சாதனைகளைத் தொடர தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரினாா்.

பிரசாரத்தில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், ஒன்றியச் செயலா்கள் மு.தங்கம், கு.தீனதயாளன், பொதுக்குழு உறுப்பினா் ராஜசேகா், நகா்மன்றத் துணைத் தலைவா் குணா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாலமுருகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சரவணன், மாவட்டத் தொழிலாளா் அணி அமைப்பாளா் பூபதி, மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவா் சந்திரசேகா், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.