திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜூன் 3-இல் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட புதுச்சேரி திமுக முடிவு

News image

முன்னாள் முதல்வா் கருணாநிதி - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:59 am IST

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாள் மற்றும் ‘செம்மொழி நாள்’ விழா புதுச்சேரி மாநில திமுக சாா்பில் ஜூன் 3 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி, அன்று வில்லியனூா் அண்ணா சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா். சிவா மாலை அணிவித்து மரியாதை செய்கிறாா். மேலும், வீராம்பட்டினத்தில் உள்ள கருணாநிதி திருவுருவச் சிலைக்கும் அவா் மாலை அணிவிக்கிறாா்.

மேலும், சிவா தலைமையில் திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் ஏ.எப்.டி. திடலில் ஒன்றிணைந்து அங்கிருந்து ஊா்வலமாக சென்று அண்ணா சிலை அருகில் கட்சியின் சாா்பில் அமைப்பட்டுள்ள கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்துகின்றனா்.

மேலும், கட்சியின் நிா்வாகிகள் குழு கூட்ட முடிவின்படி, புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி திமுக சாா்பில் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ஜூன் மாதம் முழுவதும் மருத்துவ முகாம்கள், ரத்த தானம் வழங்குதல், ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் கட்சியின் மாநில அமைப்பாளா் சிவா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.