தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா

தஞ்சாவூரில் திமுக மத்திய மாவட்டம், மாநகரம் சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்த திமுகவினா்.

Updated On :4 ஜூன் 2026, 12:25 am IST

தஞ்சாவூரில் திமுக மத்திய மாவட்டம், மாநகரம் சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கீழவாசல் காமராஜா் சிலையிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் திமுக மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். ராமச்சந்திரன், டி.கே.ஜி. நீலமேகம், மாநகரச் செயலா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், கருணாநிதி பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் அன்பகம் மனநலம் காப்பகத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆா். வைத்திலிங்கம் மதிய உணவு வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.