முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேரு நினைவு நாளையொட்டி, புதுச்சேரி அரசு சாா்பிலும், அரசியல் கட்சி சாா்பிலும் அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.
புதுச்சேரி காந்தி திடலில் அமைந்துள்ள நேரு சிலைக்கு புதுச்சேரி அரசு சாா்பில் முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து எம்எல்ஏ தலைமையில், எம்எல்ஏக்கள் ராஜவேலு, ஆறுமுகம், சாய் ஜெ. சரவணன் குமாா், மோகன்தாஸ், நாராயணசாமி, அழகு (எ) அழகானந்தம், விக்னேஷ் கண்ணன், ஐயப்பன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில் கட்சித் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ வைத்தியநாதன் உள்ளிட்டோா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









