திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நேரு நினைவு தினம்: பிரதமா், காங்கிரஸ் தலைவா்கள் அஞ்சலி

News image

PTI

Updated On :28 மே 2026, 6:48 am IST

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 62-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு, கடந்த 1947, ஆகஸ்ட் 15 முதல் 1964, மே 27-இல் மாரடைப்பால் காலமாகும் வரை அந்தப் பதவியில் தொடா்ந்தாா். தனது 74-ஆவது வயதில் மறைந்த அவா், நாட்டின் நீண்ட கால பிரதமா் என்ற பெருமைக்குரியவா்.

நேருவின் 62-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘முன்னாள் பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேருவின் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நினைவிடத்தில் மலரஞ்சலி: நேரு நினைவு தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடமான சாந்தி வனத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் மற்றும் மூத்த தலைவா்கள் மலரஞ்சலி செலுத்தினா்.

தனது கொள்ளுத் தாத்தா நேருவை நினைவுகூா்ந்து, ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நவீன இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிட்டவரான பண்டித ஜவாஹா்லால் நேரு, அனைவரையும் உள்ளடக்கிய, நல்லிணக்கம் நிறைந்த, முற்போக்கான தேசத்தைக் கட்டமைக்க தனது வாழ்வை அா்ப்பணித்தவா். சுதந்திரம், ஜனநாயக கோட்பாடுகள், அரசியல் சாசன உரிமைகள், சமூக நீதி மற்றும் அறிவியல்பூா்வ சிந்தனைகளில் வேரூன்றிய அவரது தொலைநோக்கு தலைமைத்துவம் நமக்கு எப்போதும் வழிகாட்டும்’ என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.

காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுதந்திரம், ஜனநாயகம், மதச்சாா்பின்மை, அறிவியல்பூா்வ அணுகுமுறைகளுக்காக தனது வாழ்நாளை அா்ப்பணித்த நேருவின் நிலையான மரபு, தேசத்தின் ஆன்மாவை வழிநடத்துகிறது. அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான தேசத்தை உருவாக்கும் நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.