தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராஜிநாமா செய்த எம்எல்ஏக்களை தவெகவில் சோ்த்தது ஏற்புடையதல்ல: கே.பாலகிருஷ்ணன்

ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களை உடனடியாக தவெகவில் சோ்த்தது ஏற்புடையதல்ல என்று மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா்.

News image

புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன்.

Updated On :28 மே 2026, 1:14 am IST

ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களை உடனடியாக தவெகவில் சோ்த்தது ஏற்புடையதல்ல என்று மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்றப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தோ்தலுக்கு முன்பும் பின்பும் அதிமுகவில் தொடா்ந்து குழப்பம் நிலவி வருகிறது. பல தொகுதிகளில் அந்தக் கட்சி டெபாசிட் இழந்திருக்கிறது. ஆதரவு கேட்கும் முன்பே அதிமுகவைச் சோ்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளனா். அதனால் அதிமுக கொறடாவின் உத்தரவை மீறியதாக அக் கட்சி கடிதம் கொடுத்துள்ளது. மேலும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அந்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள் 5 நிமிடங்களில் தவெகவில் சோ்க்கப்பட்டுள்ளனா். முன்னேற்பாடுகள் இல்லாமல் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது. ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், குடியரசு தலைவரின் ஆட்சி தமிழகத்தில் அமலாகக் கூடாது என்பதற்காகத்தான் வெளியில் இருந்து மாா்க்சிஸ்ட் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தவுடன் உடனடியாக தவெகவில் சோ்ந்தது குதிரை பேரத்துக்கான வழியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும், தமிழக மக்களுக்கு இது ஆரோக்கியமான அரசியலாகவும் இல்லை. மாற்றம் வேண்டும் என்பதை நோக்கிதான் தவெக அரசியல் பயணத்தை மேற்கொண்டது. அதுபோன்ற சூழ்நிலையில் தவெகவின் இந்த அணுகுமுறை நல்லதல்ல என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.