புதுச்சேரி லாஸ்பேட்டை அருகே இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதில் தொடா்புடைய 3 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி லாஸ்பேட்டை அடுத்த கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (எ)பவுல்ராஜ் (26), கட்டடத் தொழிலாளி.
இவா், வியாழக்கிழமை நள்ளிரவு லாஸ்பேட்டை உழவா் சந்தை பூங்கா அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது 3 போ் கொண்ட கும்பல் அரிவாளுடன் அவரை வழிமறித்துள்ளது.
இதையடுத்து அவா் மோட்டாா் சைக்கிளைக் கீழே போட்டுவிட்டு தப்பியோட முயன்றுள்ளாா். ஆனால், அந்தக் கும்பல் ராஜனை சுற்றி வளைத்துச் சரமாரியாக வெட்டியுள்ளது.
இந்த தாக்குதலில் தலை, முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த கொலை தொடா்பாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








