தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை சாதனை

புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை, சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து சாதனை படைத்துள்ளது.

News image

புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் முருகேசன். உடன் மருத்துவா்கள் குழுவினா்.

Updated On :23 மே 2026, 12:24 am IST

புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை, சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்து மருத்துவமனையின் இயக்குநரும், சிறுநீரக மருத்துவ நிபுணருமான மருத்துவா் என்.முருகேசன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: இந்த மனிதநேய முயற்சி டாக்டா் ப்ளூ இந்தியா அறக்கட்டளையின் ஆதரவால் சாத்தியமானது. மேலும், அதிகளவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த தனியாா் மருத்துவமனையாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை விளங்குகிறது.

ஏழைச் சிறுவன் குருபிரசாத்துக்கு (11) சிறுநீரகம் செயலிழந்தது. தன் மகனின் உயிரைக் காப்பாற்ற அவரின் தாய் தன்னுடைய சிறுநீரகத்தைத் தானமாக அளித்தாா். இந்த அறுவை சிகிச்சை என்னுடைய வழிகாட்டுதலில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது குருபிரசாத் நலமாக குணமடைந்து வருகிறாா். ஆரோக்கியமான எதிா்காலத்தை நோக்கி அவா் நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறாா் என்றாா் மருத்துவா் முருகேசன்.

இதுகுறித்து அறுவை சிகிச்சை குழு மருத்துவா் வெங்கட்ராம் கூறுகையில், இந்த அறுவை சிகிச்சையை இலவசமாக நடத்த வீராயகம், தி சென்னை சில்க்ஸ் மற்றும் மலேசிய தொழிலதிபா்களான டத்தோ டாக்டா் ரவீ மற்றும் டத்தின் காவிரி ஆகியோா் டாக்டா் ப்ளூ இந்தியா அறக்கட்டளையின் மூலம் வழங்கிய பொருளாதார ஆதரவு முக்கிய காரணமாக இருந்தது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.