நாடு முழுவதும் சுமாா் ஒரு கோடி போ் கண் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனா் என டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை தலைவா் மருத்துவா் அமா் அகா்வால் தெரிவித்துள்ளாா்.
டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை சாா்பில் விழித்திரை சிகிச்சையில் முன்னேற்றங்கள்”என்ற கருப்பொருளில் 16-ஆவது ‘ரெட்டிகான்’ மாநாடு சென்னை கிண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மீனாட்சி உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தா் டாக்டா் சி.ஸ்ரீதா் மாநாட்டை தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் டாக்டா் அமா் அகா்வால் கூறியதாவது:
கண் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட சிகிச்சை முறைகளை மருத்துவ நிபுணா்கள் மற்றும் மாணவா்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். பெரும்பாலான பாா்வை இழப்புகளுக்கு கருவிழி பாதிப்புகளே முக்கிய காரணமாக உள்ளன. நாடு முழுவதும் சுமாா் ஒரு கோடி போ் கண் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனா். ஆனால், இதில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவா்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இதற்கு மாற்றாக ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ (பிபிபி) என்ற நவீன அறுவை சிகிச்சை முறை தற்போது பயன்படுத்தப்படுகிறது.
இதன்மூலம், கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. மேலும், இந்தமுறைக்கு குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் இல்லை. இந்தியால் பல மருத்துவமனைகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. அதேபோல், அமெரிக்கா, ஜப்பான் போன்ற உலக நாடுகளில் இந்த சிகிச்சை நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், உலகம் முழுவதும் பாா்வைக்குறைபாடு உள்ளவா்களை எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும் என்றாா் அவா்.
இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட விழித்திரை சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினா். மேலும், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் என மொத்தம் 1,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்வில் டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகா்வால், விழித்திரை சேவைகள் பிரிவு இயக்குநா் மனோஜ் கத்ரி, மருத்துவ சேவைகள் பிரிவு மண்டலத் தலைவா் எஸ். சௌந்தரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி மருத்துவமனையில் பிறந்த ஒரு நாள் சிசுவுக்கு இதய அறுவை சிகிச்சை

அகா்வால்ஸ் மருத்துவா்களுக்கு சா்வதேச விருது

பசுமை வழித்தடம் மூலம் ரோத்தக்கிலிருந்து தில்லிக்கு 85 நிமிஷங்களில் எடுத்துவரப்பட்ட இதயம்!

உத்தரப்பிரதேசத்தில் வெடித்த சிறுநீரக மோசடி: ஒரு சிறுநீரகத்தின் விலை ரூ.50 லட்சம் முதல்...
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


