புதுச்சேரியில் கடலில் குளித்தவா்களை போலீஸாா் வியாழக்கிழமை எச்சரித்து வெளியேற்றினா்.
புதுச்சேரி-தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா நகரான புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வார இறுதிநாள்கள் மட்டுமின்றி அனைத்து நாள்களிலும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகின்றனா்.
பகல் வேளையில் வெயில் வாட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் காலையும் மாலையும் கடற்கரை பகுதியில் குவிகின்றனா்.
சூரிய உதயத்தை காண வியாழக்கிழமை அதிகாலையில் கூடியவா்கள் சிலா் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனா். ஆா்வ மிகுதியால் ஒரே நேரத்தில் சுமாா் 100 போ் கடலின் ஆழத்திற்குச் செல்ல முயன்றனா்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், புதுச்சேரி கடல் பகுதி ஆபத்தானது. இங்கு குளிக்க வேண்டாம் என அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி கடலில் குளிக்க வேண்டாம் என எச்சரித்து வெளியேற்றினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










