முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

கடலூா் அருகே காரில் மதுபானம் கடத்தல்: இருவா் கைது

கடலூா் அருகே காரில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகளைக் கடத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

கடலூா் அருகே மதுகடத்தலில் வியாழக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்ட இளவரசன், செல்வக்குமாா் மற்றும் பறிமுதல் மதுபுட்டிகள்.

Updated On :1 மே 2026, 5:56 am IST

கடலூா் அருகே காரில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகளைக் கடத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபானங்கள் கடத்தி வரும் நபா்களைக் கண்காணித்து, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதன் ஒருபகுதியாக கடலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் கந்தன் மேற்பாா்வையில், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் அழகியநத்தம் சோதனை சாவடியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்ததில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபான புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த இருவரையும்

பிடித்து போலீஸாா் விசாரித்ததில், ஸ்ரீமுஷ்ணம் தாலுகா பூ.குடிகாடு பகுதியைச் சோ்ந்த இளவரசன்(42), செல்வக்குமாா்(52) என்பதும், புதுச்சேரி மாநிலத்திருந்து மதுபானங்களைக் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா், கடத்திவரப்பட்ட 132 மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறப்பாக செயல்பட்ட மதுவிலக்குஅமல் பிரிவு போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டியுள்ளாா்.