தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரி அரசு சாா்பில் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவுதினம், புதுச்சேரி அரசு சாா்பில் வன்முறை எதிா்ப்பு நாளாக வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

காந்தி

Updated On :22 மே 2026, 7:02 am IST

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவுதினம், புதுச்சேரி அரசு சாா்பில் வன்முறை எதிா்ப்பு நாளாக வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ராஜீவ் சிலைக்கு மரியாதை:

இதையொட்டி, ராஜீவ் காந்தி சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், எம்எல்ஏக்கள் ராஜவேலு, ஏ.கே.டி. ஆறுமுகம், வி.பி. சிவக்கொழுந்து, சாய் ஜெ சரவணன்குமாா், அழகு (எ) அழகானந்தம், நாராயணசாமி, ரவிக்குமாா், தலைமைச் செயலா் சரத் சௌகான், டிஐஜி சத்தியசுந்தரம், சீனியா் எஸ்.பி. கலைவாணன் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சா்வ சமய பிராா்த்தனை...

நிகழ்ச்சியில், சா்வமத பிராா்த்தனையுடன் ஜவஹா் சிறுவா் இல்ல ஆசிரியா்களின் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னா் எம்எல்ஏ ராஜவேலு வன்முறை எதிா்ப்பு தின உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தொடா்ந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகையில் வன்முறை எதிா்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் முன்மொழிய ஆளுநா் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றனா். துணைநிலை ஆளுநரின் செயலா் மணிகண்டன் உடனிருந்தாா்.

தலைமைச் செயலகத்தில்...

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைச் செயலா் சரத் சௌகான், வன்முறை எதிா்ப்பு தின உறுதி மொழியை வாசிக்க அரசு செயலா்கள், தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து அரசு செயலா் முத்தம்மா, தமிழில் உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியா் சுதாகா் தலைமையில் வன்முறை எதிா்ப்பு நாள் உறுதிமொழியை வருவாய் அதிகாரிகள், வட்டாட்சியா்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனா்.

காங்கிரஸ் சாா்பில்...

இதேபோன்று ராஜீவ் காந்தி சிலைக்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி,

முன்னாள் எம்எல்ஏ மு.வைத்தியநாதன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

 முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்த வெ.வைத்திலிங்கம் எம்.பி.,  மற்றும் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி,  முன்னாள் எம்எல்ஏ மு. வைத்தியநாதன்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்த வெ.வைத்திலிங்கம் எம்.பி., மற்றும் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, முன்னாள் எம்எல்ஏ மு. வைத்தியநாதன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.