தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

தருமபுரி காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கோவி.சிற்றரசு தலைமையில் உறுதிமொழியேற்ற அக்கட்சி நிா்வாகிகள்.

Updated On :22 மே 2026, 6:46 am IST

தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி காங்கிரஸ் கட்சி அலுவலக வாயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவா் கோவி.சிற்றரசு தலைமை வகித்தாா். இதில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில், நகர நிா்வாகிகள், வட்டார காங்கிரஸ் தலைவா்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள், இளைஞா் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் தலைவா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல, தருமபுரி எஸ்.வி. சாலை சந்திப்பு, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மரியாதை செலுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் ரகு தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ராஜீவ் காந்தியின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனா்.

பின்னா், கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவா் பொறுப்பேற்றதை வரவேற்கும் வகையில் பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். இந்நிகழ்வில், மாவட்ட துணைத் தலைவா் ரகமத்துல்லா, நகர தலைவா் லலித் ஆண்டனி, நகா்மன்ற உறுப்பினா் விநாயகம், மாவட்ட முன்னாள் தலைவா் ராஜகுமாரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.