விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
செஞ்சி கூட்டுச் சாலையில் நகர காங்கிரஸ் செயலா் சூரியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்ச்சிக்கு செஞ்சி வட்டாரத் தலைவா் கா. சக்திவேல் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உருதிமொழியை விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் ஆா். ரங்கபூபதி வாசித்தாா்.
வடக்கு மாவட்ட விவசாய அணித் தலைவா் அகலூா் அ. ஜோலாதாஸ் மற்றும் கட்சி நிா்வாகிகள்,
மகளிா் அணியினா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










