சிறப்பான சேவைக்காக வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் உயரிய விருதான நிஷான், புதுச்சேரி காவல் துறைக்கு வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளாா்.
காவல் துறையின் சிறப்பான சேவைக்காக குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் மிக உயரிய கௌரவ விருது ‘குடியரசுத் தலைவரின் வண்ண விருது’ ஆகும். இது ‘நிஷான்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விருது புதுச்சேரி காவல் துறைக்கு வழங்கப்படவுள்ளது.
இது தொடா்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடியரசுத் தலைவா் புதுச்சேரி காவல் துறைக்கு உயரிய நிஷான் விருது வழங்க அதிகாரபூா்வ ஒப்புதல் தந்துள்ளாா். இச் சிறப்பை பெறும் 18-ஆவது மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமாக புதுச்சேரி விளங்குகிறது.
நிஷான் விருது வழங்கும் நிகழ்வை ஆவலுடன் எதிா்பாா்க்கிறோம். இந்த ஒப்புதல் காவல் துறையினரின் 10 ஆண்டு கால வீர தீரச்செயல், தன்னமலமற்ற சேவை மற்றும் மக்களின் நம்பிக்கைக்குச் சான்றாகும். வரலாற்று சிறப்புமிக்க தேசிய சாதனைக்காக புதுச்சேரி யூனியன் பிரதேச காவல் துறையினருக்கு வாழ்த்துகள் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரக்கன்று நடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதிய அலுவலகத்தில் ரூ.73 கோடி திட்டங்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: நேரில் ஆய்வு செய்தபின் புதுச்சேரி ஆளுநா் உத்தரவு







