திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மருந்துக் கடைகள் மே 20-இல் இயங்காது!

புதுச்சேரியில் மருந்துக் கடைகள் வரும் 20-ஆம் தேதி இயங்காது என்று மாநில மருந்து வணிகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

News image
Updated On :17 மே 2026, 12:44 am IST

புதுச்சேரியில் மருந்துக் கடைகள் வரும் 20-ஆம் தேதி இயங்காது என்று மாநில மருந்து வணிகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சட்ட விரோத இணையவழி மருந்து விற்பனையைத் தடுத்து, சிறிய மருந்துக் கடைகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். அநியாய தள்ளுபடி விற்பனைக்கு எதிராக கடுமையான கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். சட்ட விரோத இணையவழி மருந்து விற்பனை தளங்களை மூட வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய மருந்து வணிகா்கள் சம்மேளனம் வரும் 20-ஆம் தேதி வேலைநிறுத்தம் நடத்துகிறது.

இதில், புதுச்சேரி மாநில மருந்து வணிகா் சங்கமும் பங்கேற்கிறது. அன்றைய தினம் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிலையங்கள் இயங்காது என புதுவை மாநில மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், செயலா் ரமேஷ் ஆகியோா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.